நடிகை சமந்தாவுக்கு விவாகரத்து மூலம் ரூ.50 கோடி ஜீவனாம்சம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
சமீபகாலமாக நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில், விவாகரத்து மூலம் சமந்தாவுக்கு ரூ. 50 கோடி ஜீவனாம்சம் கிடைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகை சமந்தா
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை சமந்தா, ‘பானா காத்தாடி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக உருவெடுத்தார். இதை தொடர்ந்துதமிழ் திரையுலகின் பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியான நடித்துள்ளார் இவர்.
அதே நேரத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன ‘ஏ மாயா சேஸாவே’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை சமந்தா நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகர் நாகர்ஜுன் மகனான நாக சைதன்யா நடித்திருந்தார். இதை தொடர்ந்து பல்வேறு தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த சமந்தா, நடிகை நாக சைதன்யாவுடன் காதல் வயப்பட்டார்.
இந்த ஜோடி கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டது. திருமணத்துக்கு பிறகு ஹைதராபாத்தில் வசித்து வந்த சமந்தா தற்போது நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அவரை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் வெளிவரும் சில கருத்துக்கள் ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாகரத்திற்கு நடித்து சமந்தா நடித்து வரும் திரைப்படங்களில் உள்ள நெருக்கமான காட்சிகள் தான் காரணம் என கூறப்பட்டு வருகிறது.
அதாவது நாக சைதன்யாவின் குடும்பத்தினருக்கு சமந்தா நடித்து வரும் கதாப்பாத்திரங்களில் திருப்தி இல்லாததால், இப்படிப்பட்ட கதைகளில் நடிக்க வேண்டாம் என கூறி வந்ததாக தெரிகிறது. என்றாலும் சமந்தாவின் விவாகரத்து குறித்த உண்மையான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் விவாகரத்து நடைபெறும் என அவர்களின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்த விவாகரத்து மூலம் சமந்தாவுக்கு ரூ. 50 கோடி ஜீவனாம்சம் கிடைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.