சரவணனிற்கு ஆதரவாக பேசும் சந்தியா, மன்னித்து ஏற்றுக் கொள்ளும் சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சிவகாமி கோவமாக இருக்க சந்தியா வந்து அவருக்கு ஆதரவாக பேசுகிறார். மற்றொரு பக்கம் பாஸ்கரிடம் நெருக்கமாக பழக விக்கி திட்டமிடுகிறார். பின் குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து சாப்பிட சிவகாமி அனைத்தையும் மறந்து சாப்பிட வர சொல்கிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சிவகாமி கோவமாக இருக்க சந்தியா வந்து சரவணனிற்கு ஆதரவாக பேசுகிறார். என் மீது தான் தப்பு இருக்கிறது அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் உங்க புள்ள மேலே தப்பே இல்லை அவரை நீங்க மன்னிக்க வேண்டும் என சந்தியா சொல்கிறார். பின் சிவகாமியிடம் உங்க புள்ள என் சந்தோஷத்திற்காக இல்லை, உங்க சந்தோஷத்திற்காக தான் அவர் அப்படி செய்தால், நீங்க என்னை வீட்டை விட்டு அனுப்பி உங்களுக்கு கேட்ட பெயர் வர கூடாது என்பதற்காக தான் இப்படி செய்திருக்கிறார்.
ஒரு பக்கம் என் எதிர்காலம் பற்றியும், மற்றொரு பக்கம் உங்களை பற்றியும் நினைத்து அவர் மனதிற்குள் எல்லாத்தையும் போட்டு கஷ்டப்பட்டு தான் இப்படி செய்திருக்கிறார். நீங்களும் அவரை கஷ்டப்படுத்தினால் அவர் நிலைமை என்ன ஆகும் என கேட்கிறார். விக்கி பாஸ்கரிடம் பழக திட்டமிடுகிறார். அப்போது உதவி செய்வது போல நடித்து விக்கியிடம் பழகுகிறார். பின் ஆதி பசியில் இருக்க பார்வதி சென்று அனைவரையும் சாப்பிட அழைக்கின்றனர்.
முதலில் அர்ச்சனாவும் செந்திலையும் கூப்பிட செந்தில் அம்மா வந்த பின்னால் வருகிறேன் என சொல்கிறார். அர்ச்சனாவும் பசியில் இருக்கிறார். பின் பார்வதி வந்து யாரும் வரவில்லை என சொல்கிறார். அம்மாவை சென்று கூப்பிட அவரும் முதலில் வரவில்லை என சொல்கிறார். யாரும் சாப்பிடாமல் இருக்கிறார்கள் என தெரிந்ததும். சாப்பிட வருகிறார்கள். அப்போது செந்தில் அர்ச்சனாவும் வருகின்றனர். சரவணன் வரவில்லையா என கேட்க அவர் வரவில்லை என சொல்கின்றனர்.
உடனே சிவகாமி சென்று சரவணனை கூப்பிடுகிறார். ஆனால் சரவணன் எல்லார் முன்னாடியும் நான் மன்னிப்பு கேட்டேன் ஆனால் நீங்க எதுவும் சொல்லவில்லையே அப்பறம் ஏன் நான் அங்கே வர வேண்டும் என சொல்கிறார். நான் தான் கூப்பிட வந்துவிட்டேன் அப்பறம் என்ன நான் ஒரு வாரம் பேசாமல் இருந்தால் நீ ஒரு வாரம் சாப்பிடாமல் இருப்பியா என கேட்கிறார். சரவணன் கிண்டலுக்கு ஆமாம் என சொல்ல சிவகாமி அவரை மன்னித்து முத்தமிட்டு வர சொல்கிறார்.
அம்மாவிற்கு மொட்டை அடித்து இறுதி சடங்கு செய்யும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
அனைவரும் சாப்பிட அமர்ந்திருக்க சரவணன் அங்கே வருகிறார். அப்போது சிவகாமி சாப்பிட தொடங்கி சரவணனிற்கு ஊட்டி விடுகிறார். அதை பார்த்ததும் சரவணனின் அப்பா எனக்கும் ஊட்டி விடு என சொல்கிறார். வெறுப்பை காட்டினாலும் பாசத்தை காட்டினாலும் அதிகமாக தான் காட்டுவியா என சொல்லி குடும்பத்தில் அனைவரும் சந்தோசமாக சாப்பிடுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.