மத்திய அரசு சார்பில் ரூ.4000 கூடுதல் உதவித்தொகை – நாளை கடைசி நாள்!
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் மூலமாக வழங்கப்படும் விவசாயிகளுக்கான எட்டாவது தவணை பணம் ரூ.4000 பெற விண்ணப்பிக்காதவர்கள் வருகிற ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
உதவித்தொகை அறிவிப்பு:
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ. 6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசிடமிருந்து நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தின் 8-வது தவணை பெற கடந்த மே 14 ஆம் தேதி பிரதமர் மோடி 9.5 கோடி விவசாய குடும்பங்களுக்கு ரூ. 19,000 கோடி தொகையை வெளியிட்டார்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிப்பு – இயல்பு நிலைக்கு திரும்பும் மக்கள்!
ஆனால் இந்த எட்டாவது தவணை தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை பெற விண்ணப்பிக்காதவர்கள் ஜூன் 30ஆம் தேதிக்குள் பதிவுசெய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால் விவசாயிகள் உடனடியாக பதிவு செய்தால் மட்டுமே இந்த உதவித் தொகையை பெற முடியும்.
TN Job “FB Group” Join Now
மேலும் அவ்வாறு பதிவு செய்வோருக்கு எட்டாவது தவணை மற்றும் ஒன்பதாவது தவணை இணைந்து வழங்கப்படும். அதன்படி அவர்களுக்கு ரூ.4000 கிடைக்கும். இந்த நிதியுதவியை பெற ஆதார் முக்கிய ஆவணமாக உள்ளது. ஆதார் இல்லாமல் இத்திட்டத்தில் விவசாயிகள் நிதியுதவி பெற முடியாது. விவசாயிகள் தங்களது பெயரை இணைத்திருந்தாலும் ஆதாரை முறையாக இணைக்காவிட்டால் நிதியுதவி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Suppre