தமிழகத்தில் முழு ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிப்பு – இயல்பு நிலைக்கு திரும்பும் மக்கள்!
தமிழகத்தில் நேற்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் மின்சாரம் மற்றும் மின்னணு சாதனப் பொருட்கள், செல்போன் விற்பனை உள்ளிட்ட கடைகள் பல மாதங்களுக்கு பின்னர் திறக்கப்பட்டன.
கடைகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவை தடுக்க அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி மே 10 முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பின்னர் சில ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதில் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.
இந்திய – வங்காளதேச எல்லை தடை ஜூலை 14 வரை நீட்டிப்பு!
ஆனால் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அத்தியாவசிய தேவை கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க அம்மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் தமிழக அரசு கூடுதல் தளர்வுகள் அறிவித்து ஊரடங்கை ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்தது. அதன்படி சேலம் மாவட்டத்தில் மின்சாரம் மற்றும் மின்னணு சாதனப் பொருட்கள், செல்போன் கடைகள் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
மேலும் பல மாதங்களுக்கு பின்னர் கடைகள் திறக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் வியாபாரம் செய்தனர். இதனால், சேலம் மாவட்ட கடை வீதிகளில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு, இயல்பு நிலை காணப்பட்டது. மேலும் வாகன நெரிசலும் அதிகமாக இருந்தது. செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள், பேன்ஸி ஸ்டோர் மொத்த கடைகள் அதிகமாக உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் பலர் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை முறையாக கடைபிடிக்கவில்லை. இதனால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.