தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் ரூ.3,429 கோடி – தேசிய கட்சிகளின் வருமானம்!
ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு கடந்த 2019 – 2020ம் ஆண்டில் தேர்தல் நிதிக்கான பத்திரங்களின் மூலம் ரூ.3,429.56 கோடி பணத்தை அரசியல் கட்சிகள் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிகளின் வருமானம்:
அரசியல் கட்சிகள் தங்களின் உறுப்பினர்களாக உள்ள தொழிலதிபர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மூலம் நன்கொடைகளை பெறுகின்றனர். இந்த பணத்திற்கு முறையான விவரங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். தேசியக் கட்சிகள் பெரும்பாலும், தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியைத் தேர்தல் செலவுகளுக்கும், தேர்தல் பிரச்சாரத்துக்கும், பொதுச் செலவுக்கும் செல விடுகின்றது.
தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு – வாகனங்கள் ஆய்வு, ஏற்பாடுகள் தீவிரம்!
கடந்த 2018 – 2019ம் ஆண்டில் பாஜக ரூ.2,410 கோடி வருமானம் பெற்றது. இதுவே 2019-20ஆம் ஆண்டில் 50.34 சதவீதம் அதிகரித்து ரூ.3,623.28 கோடியாக அதிகரித்துள்ளது. இது போலவே அனைத்து அரசியல் கட்சிகளின் ஆண்டு வருமானமும் கடந்த ஆண்டுகளை விட அதிகரித்துள்ளது. 2019-20ஆம் ஆண்டில் பாஜக தனது ஒட்டுமொத்த வருமானமாக ரூ.3,623.28 கோடி பெற்றதாகவும், அதில் 45.57 சதவீதம் அதாவது ரூ.1,651 கோடி மட்டுமே செலவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
2019-20ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ரூ.682.21 கோடி வருமானம் பெற்றதாகவும், அதில், ரூ.998.15 கோடி செலவிட்டதாகத் தெரிவித்துள்ளது. வருமானத்தை விட 46 சதவீதம் கூடுதலாகச் செலவிட்டுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி ரூ.143.67 கோடி வருமானமாக பெற்றுள்ளது. அதில் ரூ.107.27 கோடி செலவிட்டுள்ளது. தேர்தல் நிதிப் பத்திரங்களை விற்பனை செய்துவரும் எஸ்பிஐ வங்கி தகவல் அறியும் சட்டத்தின் மூலம் 2019-20ஆம் ஆண்டில் தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் ரூ.3,429.56 கோடியை அரசியல் கட்சிகள் பெற்றுள்ளன என்று தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
பாஜக, காங்கிரஸ், என்சிபி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆகிய 4 தேசியக் கட்சிகள் சேர்ந்து 2019-20ஆம் ஆண்டில் நன்கொடை மூலம் பெறப்பட்ட வருமானத்தில் 62.92 சதவீதத்தைப் பெற்றுள்ளன. அதாவது ரூ.2,993.82 கோடியைப் பெற்றுள்ளது என்று ஏடிஆர் தெரிவித்துள்ளது.