94 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி – மாநில அரசு அறிவிப்பு!!

0
94 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி - மாநில அரசு அறிவிப்பு!!
94 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி - மாநில அரசு அறிவிப்பு!!

94 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி – மாநில அரசு அறிவிப்பு!!

தொழில் மற்றும் சுயதொழில் செய்ய உதவிகரமாக இருக்கும் பொருட்டு 94 லட்சம் குடும்பங்களுக்கு ரூபாய் 2 லட்சம் வழங்க உள்ளதாக பிஹார் அரசு அறிவித்துள்ளது.

நிதியுதவி:

பீகார் அரசு தொழில் மற்றும் சுயதொழில் செய்யும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது, மாநில அரசின் இந்த புதிய திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர், சுய வேலைவாய்ப்பிற்காக மாத வருமானம் ரூ. 6000 அல்லது அதற்கு குறைவாக பெறும் கிட்டத்தட்ட 94 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் தொகையை பொதுமக்கள் சிறு தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் கைவினைப் பொருட்கள், ஜவுளி சேவை துறைகள் மற்றும் மின் பொருட்கள் உள்ளிட்ட சிறு குடிசைத் தொழில்களில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணைய வசதி இல்லாமலேயே வீடியோ ஒளிபரப்பு – மத்திய அரசு திட்டம்!

இதுபோன்ற, சிறு குடிசைத் தொழில்களில் முதலீடு செய்யும்போது தவணை முறையில் அவர்களுக்கான தொகை விடுவிக்கப்படும். இதனால், பொதுமக்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கலாம் என மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், மாநில அரசில் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இறக்கும் பட்சத்தில் அல்லது ஊனமுற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இயற்கைக்கு மாறாக அதாவது விபத்து ஏற்பட்டு இருந்தால் அவர்களுக்கு இழப்பீடாக ரூ. 2 லட்சம் வழங்கப்படும் எனவும், விபத்து ஏற்பட்டு நிரந்தர ஊனம் ஏற்பட்டால் அவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் இழப்பீடும், இயற்கை முறையில் மரணம் அடைந்தால் ரூ. 50,000 இழப்பீடும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!