தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் – திட்டக்குழுவை சமர்ப்பிக்க உத்தரவு!
தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தால் பெண்கள் பயனடைந்துள்ளார்களா என்பதை திட்டக்குழுவாக சமர்பிக்கும்படி முதல்வர் அறிவித்துள்ளார்.
திட்டக்குழு:
தமிழகத்தில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், தமிழகத்தில் தற்போது வரை திமுக கட்சியின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டத்தினால் பொதுமக்கள் எந்த அளவுக்கு பயனுடைந்துள்ளார்கள் என்பதை திட்டக்குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தின் திட்டக்குழுவை ஆராய்ந்து பார்த்ததில் ஒரு மாதத்திற்கு பெண்கள் இந்த திட்டத்தால் குறைந்தது ரூ.800 முதல் ரூ.1200 வரை சேமித்து வைப்பதாக அறியப்பட்டது. இதே போல இல்லம் தேடிக் கல்வி, மக்களவைத் தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டத்தால் பொதுமக்கள் அதிகளவில் பயன்பெற்றது தெரியவந்துள்ளது.
இதே போல, மின் வாகனம், தொழில், துணிநூல், கைத்தறி, சுற்றுலா என பல்வேறு துறைகளுக்கான திட்டக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கழிவு மேலாண்மை, நிலப் பயன்பாடு, நீா்வள ஆதாரம், வேலைவாய்ப்பு மற்றும் திறன், வீட்டுவசதி ஆகியவற்றிற்கான திட்டக்குழுக்கள் ஆராயப்பட்டு இறுதி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்ட்டுள்ளது. மேலும், மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்திற்கான திட்டக்குழு அறிக்கையையும் வழங்கும்படி முதல்வர் அறிவித்துள்ளார்.