இந்த மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும்? தமிழக அரசு விளக்கம்!
கடந்த மாதத்தை போலவே இந்த மாதமும் குடும்ப தலைவிகளுக்கு ஒரு நாளுக்கு முன்பாகவே ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரூ.1000 உரிமைத்தொகை:
தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்.15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் 1.06கோடி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ,1000 உரிமைத்தொகை கிடைக்காமல் நிராகரிப்பு செய்யப்பட்டவர்களுக்கு மேற்முறையீடு செய்துகொள்ளலாம் என 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த மாதம் குடும்ப தலைவிகளுக்கு ஒரு நாட்களுக்கு முன்பாகவே ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இந்தியாவில் முட்டை விலை நிலவரம் என்ன? – முழு விவரம் இதோ!
அதே போல, இந்த மாதம் குடும்ப தலைவிகளுக்கு எப்போது ரூ.1000 வழங்கப்படும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மாதம் அக்.15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடந்த மாதத்தை போலவே ஒரு நாளுக்கு முன்பாகவே அக்.14 ஆம் தேதி அனைத்து குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கும் ரூ.1000 வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கும் இந்த மாதம் முதல் ரூ.1000 வழங்கப்படும் எனவும் தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.