இந்திய ரயில்வேயில் 1785 காலியிடங்கள் – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் (RRC) இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான அறிவிப்பில் தென்கிழக்கு ரயில்வேயில் Apprentices பணிக்கென ஏற்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு என ஒதுக்கப்பட்ட 1785 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் நாளை (28.12.2023) வரை மட்டுமே பெறப்படும். எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தென்கிழக்கு ரயில்வே வேலைவாய்ப்பு விவரங்கள் 2023:
- தென்கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள Apprentices பணிக்கென 1785 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Apprentices பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு + ITI முடித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.
- 01.01.2024 அன்றைய தினத்தின் படி, 15 வயது முதல் 24 வயதுக்குள் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
வங்கியில் Data Entry Operator வேலைவாய்ப்பு – 24 காலியிடங்கள் || ரூ.24,500/- மாத ஊதியம்!
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.
- இந்த ரயில்வே துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Merit List என்னும் தேர்வு முறையின் படி தேர்வு செய்யப்படுவார்கள்.
SER விண்ணப்பிக்கும் வழிமுறை:
Apprentices பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://iroams.com/RRCSER23/applicationIndex என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 28.12.2023 என்ற கடைசி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.