RRB NTPC 2019-2021 தேர்வுகள் நிறுத்திவைப்பு – பொது முடக்கம் எதிரொலி!!!
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது தொழில்நுட்பமற்ற பிரபலமான வகை பணிகளுக்கான தேர்வுகள் ஆனது நிறுத்திவைக்கப்பட்டதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான முழு விவரங்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
பொது முடக்கம் :
கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக ஒவ்வொரு மாநிலங்களிலும் பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் தொற்றின் பரவல் குறையாததினால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தொற்றின் தாக்கம் தற்போது தான் குறைந்து வருகிறது. இதனால் மாநில வாரியாக தாக்கமும் குறைந்து வருகிறது. இனி வரும் காலங்களில் தான் ஊரடங்கு நீட்டிப்பு ஏற்படுமா என்பது குறித்த தகவல்கள் வெளியாகும். மேலும் இந்த காலகட்டத்தில் நடத்த முன்னதாகவே தீர்மானிக்கப்பட்ட தேர்வுகள் பலவும் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிப்புகள் வெளியாகி வருகினறன.
RRB NTPC தேர்வுகள் நிறுத்திவைப்பு :
RRB தேர்வு வாரியம் ஆனது பல்வேறு கட்டங்களாக NTPC தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இது வரை சில கட்ட தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்னும் பல்வேறு கட்ட தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. ஆனால் நாடு முழுவதும் தற்போது பொது முடக்கம் அமலில் உள்ளதால் அடுத்து திட்டமிட்டுள்ள தேர்வுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலம் முடிந்த பின்னர் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Online Application