ரயில்வே துறை ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன் படி, முன்னதாக 5696 காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது 19.01.2024 அன்று வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது 9 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இங்கு காண்போம்.
RRB சென்னை 9000 காலிப்பணியிடங்கள்:
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் இந்தியா முழுவதும் 9000 காலியிடங்களை நிரப்ப உள்ளது. இந்திய ரயில்வே இந்த காலியிடங்களை நிரப்ப தகுதியான ஆர்வலர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பத்தை வரவேற்கிறது. RRB ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, இந்த 9000 காலியிடங்கள் டெக்னீசியன் பதவிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ரயில்வே வேலைகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விண்ணப்பங்களை மார்ச் – ஏப்ரல் 2024 வரை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தற்காலிகமாக கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) அக்டோபர் மற்றும் டிசம்பர் 2024 க்கு இடையில் நடைபெறம் எனவும், ஆவணச் சரிபார்ப்புக்கான ஷார்ட்லிஸ்ட் பிப்ரவரி 2025 இல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.