ரோஜா சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – அனு பற்றிய உண்மையை ஆதாரத்துடன் பாட்டியிடம் காட்டும் ரோஜா!
சன் டிவி “ரோஜா” சீரியலில், அனு கோமாவில் இருப்பது போல நடிக்கிறார் என்பதை கண்டுபிடிக்க ரோஜாவும், அவர் மாமியாரும் திட்டமிடுகின்றனர். அது குறித்த வீடியோ ஆதாரத்தை ரோஜா பாட்டியிடம் காட்டுகிறார். இது பற்றிய ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
ரோஜா சீரியல்:
சன் டிவி “ரோஜா” சீரியலில் அர்ஜுனும், ரோஜாவும் இரண்டாம் ஆண்டு திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். அதன் பின்னர் ரோஜா அவர் மாமியாரிடம் அனு நடிப்பதை எப்படியாவது வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என திட்டமிடுகிறார். அதற்கு ரோஜாவின் மாமியார் சூப்பில் மிளகாய் பொடி கலந்து கொடுத்திருவோம் அதை குடித்து அவள் கத்துவாள்.
அமலுக்கு வருகிறது ஓபிசி பட்டியல் சட்டம் – விவரங்கள் உள்ளே!
அதை போனில் ரெக்கார்ட் செய்து வீட்டில் இருக்கும் அனைவரிடமும் காட்டி விடலாம் என திட்டமிடுகின்றனர். அவ்வாறு சூப்பில் மிளகாய் பொடி சேர்க்க அதை அனு குடித்து விட்டு கத்துகிறார். பின்னர் ரோஜா அனு கோமாவில் இல்லை. அவள் நடிக்கிறார் என்று சொல்ல பாட்டி நம்பாமல் இருக்கிறார். அனு சூப் குடித்து எழுந்து கத்தியதை போனை மறைத்து வைத்து வீடியோ எடுக்கிறார்.
TN Job “FB Group” Join Now
அந்த போனை இந்தாங்க ஆதாரம் என்று காட்டுகிறார். அதை கேட்டதும் அனுவிற்கு கண்ணெல்லாம் கலங்குகிறது. பாட்டியும் அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பாட்டிக்கு உண்மை தெரிந்து விட்டதா? அனுவின் நிலைமை என்ன ஆகும்? என்பது குறித்து இன்றைய எபிசோடில் பார்க்கலாம். அனு குறித்த உண்மை தெரிந்தால் இந்த சீரியல் முடிந்து விடும் என்பதால் என்ன நடந்திருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.