ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் அபாயம் – மத்திய அரசின் புது விதிமுறைகள்!
நாடு முழுவதும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகள் மூலமாக உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரேஷன் அட்டைகளுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் கடைகள்:
அரசின் பல நலத்திட்டங்கள் ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களுக்கு சென்று அடைகின்றனர். ஆனால் தகுதி வாய்ந்த பலருக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்று அடைவதில்லை என புகார் வந்த வண்ணம் இருக்கிறது. நாடு முழுவதும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகள் மூலமாக உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகின்றன.
ஆதார் துறையில் (UIDAI) பணி செய்ய விருப்பமா? 1 லட்சம் வரை ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த பொருள்களை சில சமூக விரோதிகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாக குற்றங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அதனால் உண்மையாகவே உதவி தேவைப்படுபவர்களுக்கு அரசின் இந்த சலுகைகள் கிடைக்கவில்லை. தகுதியுள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் போவதையும், தகுதியற்றவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதை தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதன் படி மத்திய அரசு ரேஷன் கார்டு தற்போது பின்பற்றி வரும் விதிமுறைகளை மாற்றி தகுதியற்றவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், 100 சதுர அடிக்கு மேல் புக்கா வீடு வைத்திருப்பவர்கள், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், வீட்டில் ஏசி, ஜெனரேட்டர் வைத்திருப்பவர்கள், 80 சதுர அடிக்கு மேல் தொழில் நிறுவனங்கள், ஆலை வைத்திருப்பவர்கள், நகர்ப்புறங்களில் குடும்ப வருமானம் ஆண்டுக்கும் ரூ.3 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள், ஆயுத உரிமம் வைத்திருப்பவர்கள், ஆகியோர் தங்களது ரேஷன் கார்டை சரண்டர் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்யாவிட்டால் அரசே ரேஷன் கார்டை ரத்து செய்து விடும் என அதிரடியாக தெரிவித்துள்ளது. ஆனால் இது குறித்த எந்த அறிவிப்பும் தமிழக அரசு வெளியிடவில்லை. உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் இந்த விதிமுறைகள் படிப்படியாக வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் தமிழக அரசோ அல்லது மத்திய அரசோ இது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த விதிமுறைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.