திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் – உயர்நீதிமன்றம் உத்தரவு!
கோவில்களுக்கு பெயர் போன தமிழகத்தில் ஏகப்பட்ட பராம்பரிய மிக்க கோவில்கள் இருக்கின்றன. அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளை உயர்நீதி மன்றம் மதுரை கிளை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் இந்து அறநிலைத்துறையின் கீழ் ஏகப்பட்ட கோவில்கள் இருக்கின்றன. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவிலுக்குள் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. அந்த வகையில் தற்போது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சில கட்டுப்பாடுகளை உயர் நீதிமன்றம் விதித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதன் படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் வரும் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்செந்தூரை சேர்ந்த சீதாராமன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. மேலும் இது குறித்தி நீதிபதிகள் R.மகாதேவன், J.சத்தியநாராயணா பிரசாத் அமர்வு வழங்கிய தீர்ப்பில், வழிபாட்டுக்காக இருக்கும் கோவில்கள் என்ன சத்திரமா? கோவில்கள் பொழுது போக்கும் சுற்றுலா தலம் அல்ல என்று கூறியுள்ளனர்.
தமிழகத்தில் தனியார் கல்லூரிகளுக்கு முக்கிய எச்சரிக்கை – சுகாதாரத்துறையினரிடம் இருந்து பறந்த உத்தரவு!
Exams Daily Mobile App Download
மேலும் கோவில்களுக்கு வரும் பக்தர்கள், டவுசர், அரைகால் சட்டை, ஜீன்ஸ் பேன்ட், உள்ளிட்ட ஆடைகளை அணிந்து வருவது வருத்தமளிக்கிறது என தெரிவித்துள்ளனர். மேலும் ஆந்திராவில் திருப்பதி கோயில் வாசலில் கூட புகைப்படங்கள் எடுக்க முடியாது. ஆனால் தமிழகத்தில் சாமி சிலை முன் செல்பி எடுக்கும் நிலை இருக்கிறது என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீர்ப்பு குறித்து ஒரு வாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை வெளியுட வேண்டும் என்றும் உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.