தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

0
தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நாளை மறுநாள் நிறைவேற்றப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

நீட் விலக்கு:

தமிழகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழக அரசின் கீழ் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் 12ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனால் மத்திய அரசு நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வின் மூலமாக மட்டுமே மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுவதால் மத்திய இடைநிலைக் கல்விவாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்படுகிறது. இதனால் தமிழக பாட திட்டத்தில் படித்த மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,639 பேருக்கு கொரோனா; அதிகரிக்கும் பாதிப்பு – சுகாதாரத்துறை அறிக்கை!

இதனை எதிர்த்து பல வருடங்களாக தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலின் போது, திமுக நீட் தேர்வில் தமிழகம் முழுவதுமாக விலக்கு பெரும் என்று வாக்குறுதி அளித்தனர். இது தொடர்பான பேச்சுவார்த்தை மத்திய அரசிடம் நடந்து வருகிறது. ஆனால் இந்நிலையில், நடப்பாண்டிற்கான இளநிலை மருத்துவ சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு நாளை ( செப்டம்பர் 12) அன்று நடக்க இருக்கிறது. இது தொடர்பாக இன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அப்போது, தமிழக சட்டப்பேரவையின் நடப்பு கூட்டுத்தொடர் நாளை மறுநாள் நிறைவைடைய உள்ள நிலையில், நாளை மறுநாள் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் பேரவையில் வரவுள்ளது. மேலும்,மத்திய அரசிடம் வலியுறுத்தி நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என கூறினார். மேலும், இந்தியாவிலேயே முதன்முறையாக நாளை ஒரே நாளில் 40 ஆயிரம் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதன் மூலம் இருபது லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்கள் மொத்த எண்ணிக்கை நான்கு கோடியை நாளை எட்டும் என்று அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!