தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,639 பேருக்கு கொரோனா; அதிகரிக்கும் பாதிப்பு – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் புதிதாக 1,639 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு குறைந்து கடந்த சில வாரங்களாக இயல்பு நிலை திரும்ப தொடங்கியது. ஆனால் கடந்த சில நாட்களாக மெல்ல தினசரி பாதிப்புகள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு மேலும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்றைய பாதிப்பு திடீரென்று 1600 க்கு மேல் சென்றுள்ளது. இது கடந்த 20 நாட்களில் பதிவான அதிக பாதிப்பாகும்.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் புதிதாக 1,639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26, 32,231 ஆக பதிவாகியுள்ளது. இன்று தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 6பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 21 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் தமிழகம் முழுவதும் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 35,146 ஆக அதிகரித்துள்ளது. நிலவரப்படி, 16,399 பேர் தொற்று பாதிப்பினால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 1,517பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,80,686 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 170 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், நாளை தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் தடுப்பூசி முகாம் நடத்தி ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசிகள் போட தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.