நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்!!

0
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்!!
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்!!
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்!!

2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் வெளியானதை தொடர்ந்து, தற்போது நடப்பு நிதியாண்டிற்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

ரெப்போ வட்டி விகிதம்:

நாட்டில் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி அன்று பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவரின் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இந்த ஆய்வறிக்கையில், 2024ஆம் ஆண்டு இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 விழுக்காடாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

Follow our Instagram for more Latest Updates

இந்த வளர்ச்சி விகிதம் உலக வங்கி, ஐஎம்எஃப் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் மதிப்பீடுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும் ஆய்வறிக்கையில், உலகளாவிய பொருளாதார அரசியல் நிலவரங்களின் அடிப்படையில் உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 6 முதல் 6.8 சதவீதமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொருளாதார வளர்ச்சி குறித்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளதாவது, நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்படுவதாகவும் அறிவித்துள்ளார். மேலும் நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் சராசரியாக 5.6% ஆக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!