தமிழகத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வு இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
செய்முறை தேர்வு:
தமிழகத்தில் 2022 – 2023 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 13 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த பொதுத் தேர்வை சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர். இந்த தேர்வின் முடிவுகள் மார்ச் 5ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆவினின் காலிப்பணியிடங்கள் TNPSC மூலம் நிரப்பப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
அடுத்ததாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 – ம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இந்த தேர்வை 10 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இந்த நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ஆம் தேதி செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. இந்த செய்முறை தேர்வு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த சுற்றறிக்கையை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை இயக்குனர் அனுப்பியுள்ளார்.
அதில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வை மார்ச் 1ஆம் தேதி முதல் 9ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். அத்துடன் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விருப்பத்தின் பேரில் ஆய்வக உதவியாளரை நியமிக்க வேண்டும். மேலும் பார்வை திறன், செவித்திறன், உடல் இயக்க குறைபாடு உள்ள மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் பெயரில் இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் பாடங்களில் சரியான விடையை தேர்வு செய்யும் விதமாக வினாத்தாளை வழங்க வேண்டும். செய்முறை தேர்வின் மதிப்பெண்களை மார்ச் 15 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.