தமிழகம் முழுவதும் துணிக்கடை, நகைக்கடைகள் திறப்பு?? முதல்வரிடம் கோரிக்கை!!
தமிழகத்தில் வருகிற 21ம் தேதி முதல் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் மீண்டும் துணிக்கடைகள் மற்றும் நகை கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடைகள் திறப்பு:
தமிழகத்தில் கடந்த 14ம் தேதி முதல் பாதிப்புகள் குறைவாக காணப்படும் 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. இந்த பகுதிகளில் அழகு நிலையம், சலூன், டாஸ்மாக், கண் கண்ணாடி விற்பனை, பூங்கா, விளையாட்டு பூங்காக்கள் போன்றவை செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியது. ஆனால் நகை மற்றும் துணி விற்பனை கடைகள் திறப்புக்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
தமிழகத்தில் பாதிப்புகள் அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஜூன் 21 வரை நீட்டிப்பு – அமைச்சர் அறிவிப்பு!!
இதனால் கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் வருகிற 21ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இதை அடுத்து புதிய தளர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அவர்கள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து சில கோரிக்கைகளை விடுத்துள்ளார். அதன்படி தமிழகத்தில் துணிக்கடைகள், ஜவுளி கடைகள் மற்றும் நடைபாதை வியாபாரங்கள் மீண்டும் வழக்கம் போல் இயங்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து ஆலோசித்து விரைவில் தனது முடிவை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.