TN TRB தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு நியமன தேர்வு ரத்து? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத் தேர்வு நடத்தப்பட உள்ளது. தற்போது இந்த நியமன தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நியமனத் தேர்வு
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இதில் குறிப்பாக கடந்த மாதம் முதுகலை ஆசிரியர், கணினி பயிற்றுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கான சிறந்த X – பேக்டர் இவர்கள் தான்? பிராட் ஹாக் கருத்து!
அத்துடன் இந்த ஆண்டுக்கான திட்ட தேர்வுகால அட்டவணையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் சுமார் 9494 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பொதுவாக அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியில் பணிபுரிய ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது வரை பணி வழங்கப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மோசடியை தவிர்க்க புதிய திட்டம்!
இந்த நியமன தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணிகளில் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் பெறப்பட்டது. மேலும் நேற்று சென்னை டி.பி.ஐ வளாகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் நியமனத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.