IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கான சிறந்த X – பேக்டர் இவர்கள் தான்? பிராட் ஹாக் கருத்து!

0
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கான சிறந்த X - பேக்டர் இவர்கள் தான்? பிராட் ஹாக் கருத்து!
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கான சிறந்த X - பேக்டர் இவர்கள் தான்? பிராட் ஹாக் கருத்து!
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கான சிறந்த X – பேக்டர் இவர்கள் தான்? பிராட் ஹாக் கருத்து!

IPL 2022 போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு சிறந்த எக்ஸ்- காரணிகளாக விளங்கும் இரண்டு முக்கியமான வீரர்களை குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.

IPL போட்டிகள்

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளின் 15வது சீசன் பல்வேறு புதிய மாற்றங்களுடன் கோலாகலமாக துவங்க இருக்கிறது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் IPL 2022 மார்ச் 26 ஆம் தேதி அன்று துவங்க இருக்கும் நிலையில், விளையாட்டு துறையை சேர்ந்த பல்வேறு வல்லுநர்கள் ஒவ்வொரு அணியின் உரிமையாளர்களும் முதல் ஆட்டத்தில் தனது அணி சார்பில் களமிறக்கும் உத்தேச XI அணிகளை கணித்து வருகின்றனர். அதன்படி IPL நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி பல புதிய மாற்றங்களுடன் இந்த சீசனில் களமிறங்க ஆயத்தமாக இருக்கிறது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மோசடியை தவிர்க்க புதிய திட்டம்!

அந்த வகையில் இப்போது CSK அணியில் தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயீன் அலி ஆகியோர் தக்க வைக்கப்பட, 2022 மெகா ஏலத்தின் முடிவில் 21 வீரர்கள் அணியில் இணைந்துள்ளனர். இதில், CSK அணியின் மூத்த வீரர்களான அம்பதி ராயுடு மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்புகள் இருப்பதாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார். CSK அணி, 2022 மெகா ஏலத்தில் ராயுடுவை 6.75 கோடி ரூபாய்க்கும், உத்தப்பாவை ரூ. 2 கோடிக்கும் சொந்தமாக்கியது.

தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை, அடுத்த 3 நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் அறிக்கை!

இப்போது இந்த 2 வீரர்களை குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஹாக் தனது யூடியூப் சேனலில் பதிவேற்றிய வீடியோவில் பேசுகையில், ‘மிடில் ஆர்டரில் உள்ள அம்பதி ராயுடு மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் CSK தரப்பில் X -பேக்டர்களாக இருக்கப் போகிறார்கள். அவர்கள் லோயர் ஆர்டரின் அழுத்தத்தை குறைக்க முடியும் அதே நேரத்தில் டு பிளெசிஸ் வேலையை சிறப்பாக செய்ய முடியும் என்று நினைக்கிறேன். CSK ஏலத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டது. அவர்கள் நிறைய இளம் வீரர்களை தேர்வு செய்துள்ளனர். குறிப்பாக, இதில் கெய்க்வாட் ஒரு சிறந்த தேர்வாக அமைந்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!