குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.50 % ஆக உயர்வு – RBI ஆளுநர் அறிவிப்பு
இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் வீட்டு கடன் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம்:
இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 2022 ஆண்டு மட்டும் 5 முறை ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டது. இறுதியாக 6.25 % என நிர்ணயிக்கப்பட்டது. இந்த வட்டி விகித உயர்வால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தனி நபர்கள் பெறும் கடன்களுக்கான வட்டி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தேசிய பென்சன் திட்டத்தில் மாநில அரசு ஊழியர்களின் பணம் கிடைக்குமா? நிதியமைச்சகம் விளக்கம்!
Follow our Instagram for more Latest Updates
அத்துடன் மாதந்தோறும் செலுத்தும் EMI தொகையும் அதிகரித்துள்ளது. இந்த வட்டி விகித உயர்வால் சாமானிய மக்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கும் இந்த வேளையில் இன்று மீண்டும் ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. 2022 – 2023ம் நிதியாண்டில் 6-வது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீததிலிருந்து 6. 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். நேற்று மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கி நிதி கொள்கை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் வீடு மற்றும் வாகன கடந்த கால வட்டி விகிதம் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.