தேசிய பென்சன் திட்டத்தில் மாநில அரசு ஊழியர்களின் பணம் கிடைக்குமா? நிதியமைச்சகம் விளக்கம்!
நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பான கேள்வி ஒன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது பற்றி விரிவாக பார்ப்போம்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் கிடைப்பதில்லை என்பதால் இத்திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
விவசாயிகளுக்கான மத்திய அரசின் உதவித்தொகை அதிகரிப்பு? வெளியான முக்கிய தகவல்!
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில், தற்போது சில மாநிலங்களில் மட்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதனால் மாநில அரசுக்கு ஏதேனும் நிதி நெருக்கடி நிலை ஏற்படுமா? என்றும் கேட்கப்பட்டது. இதற்கு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, தற்போது ஜார்கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்ப்படுத்துவதாக அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதால் மாநில அரசுக்கு வருங்காலத்தில் நிதிச்சுமை ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. மேலும் PFRDA சட்டத்தின் கீழ், தேசிய பென்ஷன் திட்டத்தில் அரசு ஊழியர்களின் கணக்கில் இருக்கும் நிதியை மாநில அரசிடம் திருப்பி தருவது குறித்து கூறப்படவில்லை என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு திட்டம் அமல்படுத்துவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று நாடாளுமன்றத்தில் ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது.