மாநிலம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறப்பு? ஜூன் 28ல் முக்கிய ஆலோசனை!
கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வருகிற ஜூன் 28ம் தேதி அன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் அவர்கள் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
கர்நாடக மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஆதிக்கம் செலுத்தி வந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. 2021-22 ஆம் கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில் மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையில் மாநிலத்தில் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து அமைச்சர் சுரேஷ்குமார் அவர்கள் வருகிற ஜூன் 28ம் தேதி அன்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பற்றாக்குறை – பொருட்கள் வழங்குவதில் தாமதம்!
பள்ளி கல்வித்துறை ஆணையரகத்தில் நேற்று (ஜூன் 25) இணைய வழியில் மாவட்ட காவல் உயர் அதிகாரிகளுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் அவர்கள் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட அதிகாரிகளை பள்ளிகள் மீண்டும் திறக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி கேட்டுக்கொண்டார். மேலும் முதல் கட்டமாக 7 முதல் 10 ஆம் வகுப்புகளையும், அடுத்தகட்டமாக 5, 6 ஆம் வகுப்புகளையும் தொடங்க அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் அவர்கள் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் வருகிற ஜூன் 28ல் ஆலோசனை மேற்கொண்டு கூட்டத்தில் வெளிப்படும் கருத்துக்களை மாநில முதல்வர் எடியூரப்பா அவர்களிடம் தெரிவிக்கவுள்ளார். இதையடுத்து மாநில முதல்வர் எடியூரப்பா அவர்கள் இதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.