மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உயர்வு – வெளியாகும் சூப்பர் அறிவிப்புகள்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உயர்வு - வெளியாகும் சூப்பர் அறிவிப்புகள்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உயர்வு - வெளியாகும் சூப்பர் அறிவிப்புகள்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உயர்வு – வெளியாகும் சூப்பர் அறிவிப்புகள்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இந்த ஆண்டு அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டதால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதனால் அரசு நிதி நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதில் குறிப்பாக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் அரசு ஊழியர்களுக்கான நிலுவை தொகையும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

பிப்.22 முதல் அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் முகாம் – புதிய கார்டு பெற கட்டணம் கிடையாது!

அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 31% அகவிலைப்படி உயர்வை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு தொடங்கிய நிலையில் இன்னும் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அத்துடன் , அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி நிலுவைத் தொகை, வீட்டு வாடகைப்படி உயர்வு, அடிப்படை சம்பள உயர்வு பற்றிய அறிவிப்புகளுக்காக அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். முன்னதாக இதன் அறிவிப்பு குடியரசு தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – பான், ஆதார் இணைப்பு! மார்ச் 31 கடைசி நாள்!

அதன் பின்னர் பட்ஜெட்டில் இதுபற்றிய அறிவிப்பு இடம்பெற்று இருக்கும் என்றும் அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் மார்ச் மாதத்தில் ஹோலி பண்டிகை தினத்துக்குள் அடிப்படை சம்பள உயர்வு பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தற்போது எதிர்பார்க்கின்றனர். மேலும் அரசு ஊழியர்கள் fitment factor 2.57 என்பதிலிருந்து 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்றும் 2 லட்சம் ரூபாய் வரை அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்கள். அத்துடன் வீட்டு வாடகைப்படி தொகையை உயர்த்துவதற்கான அறிவிப்புக்கும் அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!