தமிழகத்தில் இ-பதிவு காரணங்களில் திருமணம் மீண்டும் நீக்கம் – பொதுமக்கள் அதிர்ச்சி!!
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையில் இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இ-பதிவு காரணங்களில் இருந்து இம்முறை திருமணம் மீண்டும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இ-பதிவு காரணங்கள்:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமடைந்து வந்ததன் காரணமாக மக்களை பாதுகாக்கும் பொருட்டு கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். தொடக்கத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த மே மாதம் 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இன்று(ஜூன் 7) முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. ஆனால் தற்போது வரை இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்திற்கு வெளியே பயணிக்கும் மக்கள் முறையான காரணங்களை தெரிவித்து இ-பதிவினை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இ-பதிவு காரணங்களில் இருந்து திருமணம் நீக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
தனத்தின் குழந்தை இறந்தது தெரிந்து நொறுங்கிப்போகும் மூர்த்தி – உண்மையை உடைப்பாரா ஜீவா??
மேலும் ஏற்கனவே திட்டமிட்ட திருமணம், நிச்சயம் போன்ற நிகழ்வுகளை எவ்வாறு நடத்துவது என்று பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் அவர்கள் கூறுகையில், தமிழகத்தில் பொதுமுடக்கத்தின் பொழுது திருமணத்திற்காக இ-பதிவில் குழு பதிவு முறை ஏற்படுத்தப்பட்டது. தற்போது இ-பதிவில் இருந்து திருமணம் நீக்கப்பட்டுள்ளது. இ-பதிவு முறை குறித்து மாநில அரசு தான் முடிவெடுக்கும் என்று தெரிவித்தார். இந்நிலையில் இ-பதிவில் மீண்டும் திருமணம் நிகழ்வை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.