ISCE மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வு முடிவுகள் வெளியீடு!
ஐஎஸ்சிஇ நிர்வாகத்தின் கீழ் பயிலும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி, மாணவர்கள் எழுதிய முதல் பருவத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவு வெளியீடு:
இந்தியா முழுவதும் கொரோனா தாக்கம் எதிரொலியாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மாணவர்களின் நலன் அடிப்படையில் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் கடந்த ஆண்டு கொரோனா எழுச்சி காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.
TN Job “FB Group” Join Now
இந்த வகையில் 2021ம் ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இல்லதாதல் ஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் – டிசம்பர் மாதத்தில் இரண்டு பருவங்களாக பிரித்து இரண்டு பருவத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 16ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு – விரைவில் அறிவிப்பு!
இந்த தேர்வு முடிவுகள் ஆன்லைன் முறையிலும் மற்றும் SMS மூலமாகவும் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறந்த முறையில் முதல் பருவத் தேர்வு நடந்து முடிந்தது. இதே முறையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வை நடத்திய சிபிஎஸ்இ நிர்வாகம் இன்னும் தேர்வு முடிவுகளை வெளியிடவில்லை. இந்த வகையில் சிபிஎஸ்இ நிர்வாகம் எப்போது தேர்வு முடிவுகளை வெளியிடும் என்ற தகவல்களும் குறிப்பிடவில்லை. அதனால் சிபிஎஸ்இ கீழ் பயிலும் மாணவர்கள் தேர்வு முடிவுகள் வராததால் வருத்தத்தில் உள்ளனர்.