தமிழக கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு – விரைவில் அறிவிப்பு!

0
தமிழக கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு - விரைவில் அறிவிப்பு!
தமிழக கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு - விரைவில் அறிவிப்பு!
தமிழக கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு – விரைவில் அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உள்ளதாக தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை தொடர்ந்து கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு பொருளாதார ரீதியிலான நெருக்கடி நிலை ஏற்பட்டது. இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெற்று வரும் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 17% இருந்து 31% ஆக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாகவும் அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த அறிவிப்பில் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பற்றி எதுவும் இடம்பெறவில்லை. அதனால் நியாய விலை கடைகள் சார்பில் உள்ள அனைத்து ஊழியர்களும் தமிழக முதலமைச்சருக்கும் அத்துடன் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கும் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் கதாபாத்திரம் – ஷாக் ரிப்போர்ட்!

இந்த மனுவில் கூறியதாவது, கடந்த 2021 ஆம் ஆண்டு அரசு புதிய ஊதிய உயர்வு ஆணை வெளியிட்டது. இதில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வு கூட்டுறவு ஊழியர்களுக்கும் வழங்கலாம் என்பது இடம் பெறவில்லை. இதேபோல் தற்போது அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்படும் அகவிலைப்படி உயர்வு வழங்க அரசாணை பிறப்பித்துள்ளது. இதிலும் கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து எந்தவொரு அறிவிப்பும் இடம்பெறவில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். அத்துடன் கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவை தொகையும் விரைவில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!