தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பில் முக்கிய அறிவிப்பு – மானியத்தொகை விடுவிப்பு!
கொரோனா 2ம் அலை தொற்றுக்கு பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து விதமான பள்ளிகளும் முழுவதுமாக திறக்கப்பட இருக்கும் நிலையில் பள்ளிகளுக்கான மானியத்தொகை 50% விடுவிப்பு செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மானியத்தொகை விடுவிப்பு
தமிழகத்தில் கொரோனா பேரலை தொற்று காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 1ம் தேதியன்று 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டது. இதையடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளும் மீண்டுமாக துவங்க இருக்கிறது.
தமிழகத்தில் நாளை (அக்.28) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அந்த வகையில் இம்மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்தும் அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அரசு தொடக்க பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கான மானியத் தொகையை 50 சதவீதம் விடுவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Post Office அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – அதிக லாபம் தரும் சேமிப்பு திட்டங்கள்!
அதாவது கொரோனா நோய் தொற்று சூழலுக்கு மத்தியில் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்படுவதால் கிருமிநாசினி வாங்குதல், கழிப்பறை மற்றும் வகுப்பறைகள் பராமரிப்பு பணிகளுக்காக இந்த மானியத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சில முன்னேற்பாட்டு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ரூ.77.9 கோடி மானியத்தொகையில் இருந்து சுமார் 50% விடுவித்து தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.