ஜூன் 20 முதல் முழு ஊரடங்கில் தளர்வுகள் – மாஸ்க் அணிய தேவையில்லை!
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வரும் பட்சத்தில், தடுப்பூசிகள் அதிகளவு செலுத்தப்பட்டுள்ளதாலும் ஜூன் 20 ஆம் தேதி முதல் முகக்கவசம் அணிய தேவையில்லை என பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
கொரோனா 2 ஆம் அலை தாக்கமானது இந்தியாவை போல மற்ற உலக நாடுகளையும் பாதித்துள்ளது. அந்த வகையில் மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் இந்த நோய் தாக்கத்தை தற்போது எதிர்கொண்டு வருகிறது. அதனால் ஒவ்வொரு நாட்டிலும் நோய் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன், தடுப்பூசிகளும் அதிகளவு செலுத்தப்பட்டு வருகிறது. அதன் காரணமாக கொரோனா தொற்று குறைந்து வரும் மத்தியில் ஊரடங்கில் இருந்து தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் TET 2013 தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி – அரசுக்கு கோரிக்கை!
அந்த வகையில் வரும் 20 ஆம் தேதி முதல் பொது இடங்களில் மக்கள் முகக்கவசங்களை அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. இது பற்றி பிரான்ஸ் நாட்டின் பிரதம மந்திரி ஜீன் காஸ்டெக்ஸ் கூறுகையில், ‘நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால், பொது மக்கள் முகக்கவசங்களை அணிய வேண்டிய தேவையில்லை. மேலும் இன்று (ஜூன் 17) முதல் ஊரடங்கில் இருந்து சில விலக்குகள் அளிக்கப்படும். அதன் படி பிரான்சில் ஆண்டுதோறும் நடைபெறும் தெரு இசை விழாவுக்கு ஒரு நாள் முன்னதாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
பிரான்ஸின் சுகாதார நிலைமை நாங்கள் எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேறி வருவதால் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்’ என்று அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார். இது தவிர பொது போக்குவரத்து, விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கங்கள் மற்றும் பிற நெரிசலான இடங்களில் முகக்கவசங்கள் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர பிரான்சில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் சராசரி எண்ணிக்கை 3,200 ஆக குறைந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 16.5 மில்லியன் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முட்டாள் பிரான்ஸில் முக கவசம் அணிய வேண்டாம் என்கிற நமக்கு எதற்கு
Hfomvmxeh