குழப்பத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் – 4 மாதங்களாக முடங்கிய நியமன பணிகள்!!

0
குழப்பத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் - 4 மாதங்களாக முடங்கிய நியமன பணிகள்!!
குழப்பத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் - 4 மாதங்களாக முடங்கிய நியமன பணிகள்!!
குழப்பத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் – 4 மாதங்களாக முடங்கிய நியமன பணிகள்!!

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் என்று தனியாக வாரியம் தேவை இல்லை. அரசு பணியாளர்களின் வாரியத்திலேயே இதற்கான பணிகள் நடைபெறும் என்று அரசு அறிவித்திருந்தது.

குழப்பம் நீட்டிப்பு:

தமிழகத்தில் அரசு அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போன்ற பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான டி.என்.பி.எஸ்.சி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதேபோல், பள்ளிக்கல்வித்துறையில் மற்றும் உயர்கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்கள், பேராசிரியர்கள் போன்ற பணியாளர்களை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி வாரியம் மூலம் தேர்வு நடத்தி அதன் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஜூலை 12 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – சமூக, மத, அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி!

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்தது. தேர்தல் பற்றிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்ட உடன் அரசு துறைகளில் உள்ள பணிகளுக்கு பணியாளர் நியமனங்கள் மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், அதன்பின்னர், தமிழகத்தில் ஆசிரியர்களை நியமிக்க உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படுவதாகவும், அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமே ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அரசு அறிவித்தது.

TN Job “FB  Group” Join Now

அரசின் அறிவிப்புகள் வெளி வந்து சில மாதங்கள் ஆன நிலையில், அரசின் அறிவிப்பு பற்றிய முழுமையான விவரங்கள் ஏதும் வெளிவரவில்லை. இதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் தொடர்ந்து இயங்குவதா அல்லது கலைப்பதா என்ற குழப்பம் நீடித்து வருகின்றது. இதனால் ஆசிரியர் பணி நியமனங்களும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!