ஜூலை 12 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – சமூக, மத, அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி!
கொரோனா தொற்று கட்டுப்பாடுகளாக தற்போது நடைமுறையில் உள்ள மாநில அளவிலான முழு ஊரடங்கு உத்தரவை ஜூலை 12 வரை நீட்டித்து கோவா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் சமூக, அரசியல் கூட்டங்களில் 100 பேர் வரை கலந்து கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
கோவாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கோவாவில் ஜூலை 5 வரை அமல்படுத்தப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தளர்வுகள் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஒரு வார பொது முடக்கத்தில் சமூக, அரசியல், கலாச்சார கூட்டங்கள், திருமண நிகழ்வுகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த நிகழ்வுகளில் 100 பேர் அல்லது 50 சதவீத இருக்கைகள் திறனுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளி குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் – அமைச்சர் விளக்கம்!
இருப்பினும், மாநிலத்தில் உள்ள சூதாட்ட விடுதிகள் ஜூலை 12 வரை தொடர்ந்து மூடப்படும். இது குறித்து அரசு அறிவிப்பில், ‘கோவாவில் சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார கூட்டங்கள், திருமணங்கள் மற்றும் பிற கூட்டங்கள் 100 நபர்களுடன் அல்லது 50% இருக்கை வசதிகளுடன் அனுமதிக்கப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவாவில் முதன் முதலாக மே 9 ஆம் தேதி விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவானது, கடலோர மாநிலத்தில் அதிகரித்து வந்த நோய் தொற்று எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
TN Job “FB Group” Join Now
அந்த வரிசையில் ஜூலை 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் உட்புற விளையாட்டு வளாகங்கள், ஆடிட்டோரியங்கள், சமூக அரங்குகள், பயணிகள் கப்பல்கள், நீர் பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், ஜிம், ஸ்பா, மசாஜ் பார்லர்கள், சினிமா அரங்குகள், தியேட்டர்கள் மற்றும் பிற நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்படும் என்று அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசு அதிகாரிகளிடமிருந்து முன் அனுமதியைப் பெற்ற பின் போட்டித் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம் எனவும் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவாவில் நேற்று (ஜூலை 4) ஒரு நாளில் 164 புதிய பாதிப்புகளும், 4 இறப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளது.