டிச.20ம் தேதிக்கு பின்னர் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை பரிந்துரை!

0
டிச.20ம் தேதிக்கு பின்னர் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை பரிந்துரை!
டிச.20ம் தேதிக்கு பின்னர் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை பரிந்துரை!
டிச.20ம் தேதிக்கு பின்னர் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை பரிந்துரை!

டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பாடு அடைந்து வரும் நிலையில் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு இரண்டு பரிந்துரைகளை அனுப்பியுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்த திட்டமிட்டு மாநில அரசுகள் மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கான பணிகளை மேற்கொண்டது. அதன்படி அனைத்து மாநிலங்களும் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு அரசின் நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் கடும் காற்று மாசுபாடு காரணமாக மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த காற்று மாசுபாட்டால் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளிய சன் டிவி ‘கயல்’ சீரியல் – இந்த வார TRP ரேட்டிங்!

இந்த வழக்கு விசாரணையில் காற்று மாசுபாடு என்பது மிக முக்கிய பிரச்சனை காற்றுத்தர குறியீட்டை 500 ரில் இருந்து 200 ஆக குறைக்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேவைப்பட்டால் ஊரடங்கை விதிக்கவும் அனுமதி வழங்கியது. ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், காற்றின் தரம் மேம்படாத நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறந்தது ஏன் என்று கேள்வி எழுப்பியது.

PF அக்கவுண்ட்டில் இருக்கும் Balance தொகையை அறிந்து கொள்ளும் 4 வழிகள் – பயனர்கள் கவனத்திற்கு!

அதனால் மீண்டும் மறு உத்தரவு வரும் வரை டெல்லி அரசு மூடப்பட்டது. கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்றின் தரம் சிறிது மேம்பட்டு வருவதால் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு இரண்டு பரிந்துரைகளை அனுப்பியுள்ளது. 6 ஆம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை உடனடியாக திறக்கலாம் என்றும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை வரும் 20 ஆம் தேதிக்கு பிறகு திறக்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!