தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ரீசார்ஜ் கூப்பன், புடவை பரிசு!
மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் ரூ.200 மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பன், புடவை மற்றும் குடை போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
மாநிலம் முழுவதும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு மாநில அரசுடன் தன்னார்வ நிறுவனங்கள் சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி வருகிறது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் தற்போது தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதற்கு தடுப்பூசிகள் முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் திருத்தம் – முதல்வர் ட்வீட்!
தற்போது அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் தடுப்பூசி செலுத்துபவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊரக மற்றும் கிராம பகுதி மக்களிடையே தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் மொபைல் ரீசார்ஜ் கூப்பன், புடவை மற்றும் குடை போன்ற அலங்கார பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த சலுகை போபால் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போபால் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு முதலில் டோக்கன்கள் வழங்கப்படும். பின்பு குலுக்கல் முறையில் அதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.200 மதிப்புள்ள மொபைல் ரீசார்ஜ் கூப்பன், புடவை, குடை போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.