“பாரதி கண்ணம்மா” சீரியல் அகிலன் விலக இதுதான் காரணம் – அவரே சொன்ன விளக்கம்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அகிலன் கதாபாத்திரத்தில் நடித்தவர் மாற்றப்பட்ட நிலையில், இது குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அகிலன் விளக்கம் ஒன்றை அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
பாரதி கண்ணம்மா:
விஜய் டிவியில் ஒளிபரப்பான டாப் சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் தெலுங்கு சீரியல் ஒன்றின் ரீமேக்காக இருந்தாலும், தமிழ் மக்களுக்கு ஏற்றார் போல கதைக்களத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. முதலில் கருப்பாக இருப்பதால் கண்ணம்மா அனைத்து இடங்களிலும் புறக்கணிக்கப்படுவதாக கதைக்களம் இருந்தது. அதன் பின்னர் அம்மா இல்லாமல் வளரும் குழந்தைக்கு சித்தி செய்யும் கொடுமைகள் பற்றி கட்டப்பட்டது. ஆனால் அவரை ஒரு பணக்கார டாக்டர் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.
காதலை சொல்ல வரும் சரஸ்வதி, திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த தமிழ் – வெளியான ப்ரோமோ!
பின்னர் அவர் மாசமான பின்னர் கதையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. தற்போது 8 ஆண்டுகளுக்கு பின்னர் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தை பிறக்க ஒரு குழந்தை அப்பாவிடமும், ஒரு குழந்தை அம்மாவிடமும் வளர்கிறது. கண்ணம்மாவிற்கு தற்போது தான் இரட்டை குழந்தை குறித்த உண்மை தெரிந்துள்ளது. இந்த வாரம் அஞ்சலியின் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர் பல ட்விஸ்ட்களை எதிர்பார்க்கலாம்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அகிலன் கதாபாத்திரம் மாற்றப்பட்டு வேறு ஒருவர் நடித்து வருகிறார். இது குறித்து சமூக வலைத்தளங்களில் அகிலனிடம் கேள்விகள் குவிந்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அகிலன் விலகியதற்கான காரணத்தை விளக்கமாக தெரிவித்து வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வருகின்றது, விஷால் அவர்களின் படம் மற்றும் பீட்சா 3 ஆகிய படங்களில் நடித்து வருவதால் சிரீயலிலிருந்து வெளியேறும் நிலை வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.