அண்ணா பல்கலை தொலைதூர மாணவர்களுக்கு மறுதேர்வு – அறிவிப்பு வெளியீடு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூரம் வாயிலாக கல்வி பயிலும் மாணவர்களுக்கு மறுதேர்வு பற்றிய அறிவிப்பை பல்கலை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூன் மாத இறுதியில் தேர்வுகள் நடக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுதேர்வு அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த கல்வி ஆண்டு முதல் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டுக்கான பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்பட்டது. கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் கூட ஆன்லைன் முறையில் தான் நடத்தப்பட்டது. நடப்பு ஆண்டிலும் கொரோனா பாதிப்புகள் தொடர்வதால் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் மதுபான பார்கள் திறப்பு? அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மாணவர்களுக்கான கடந்த ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடத்தப்பட்டது. பல்வேறு காரணங்களினால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடந்த பருவ தேர்வுகளுக்கு மறுதேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியது. அதனபடி, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மறு தேர்வுகள் நடத்த திட்டமிட்டிருப்பதாக பல்கலை நிர்வாகம் அறிவித்தது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, அண்ணா பல்கலையில் தொலைதூர கல்வி பயிலும் மாணவர்கள் ஜூன் 14ம் தேதிக்குள் பல்கலையின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் ஜூன் இறுதியில் தொடங்கி ஜூலை வரையிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடந்த பருவ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களும் மறுதேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். கடந்த ஆண்டு பதிவு செய்த மாணவர்கள் இந்த முறை பதிவு செய்ய தேவை இல்லை என்று பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.