தமிழகத்தில் தனியார் மதுபான பார்கள் திறப்பு? அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் பார்களை அடைத்து தனியார் மூலம் பார்களை திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தொடர்ந்து தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
தனியார் பார்கள்:
தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் மதுக்கடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் சூழலில் விரைவில் தனியார் பார்களை திறக்க அரசு திட்டமிட்டு வருவதாக தொடர்ந்து தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. தற்போது இதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இது குறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் மதுபான கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்கள் அனைத்தும் மூடப்பட்டு, தனியார் பார்களை திறக்க அரசு திட்டமிட்டு வருகிறது. தமிழக அரசு வருவாய் ஈட்டும் நோக்கத்தில் இத்தகைய திட்டம் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது உண்மை என்றால் இந்த திட்டம் மிகுந்த ஆபத்தனைவையாகும். மேலும் தமிழகத்தில் ஏழை, எளிய பெண்கள் தங்களது கணவனை இழந்து தவிப்பதற்கு முக்கிய காரணமாக மதுக்கடைகள் இருந்து வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் மதுக்கடைகள் மூட வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்த நிலையில் அவரது தலைமையிலான அரசு தனியார் பார்களை திறக்க திட்டம் மேற்கொள்வது முறையல்ல.
தனியார் நிதி நிறுவன கடன் தொகை வசூல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தனியார் பார்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டால் அவை அனைத்தும் குடியிருப்பிற்கு அருகாமையில் திறக்கப்படும். இதனால் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே இத்தகைய திட்டத்தை அரசு மேற்கொண்டால் அதை உடனடியாக நிறுத்தி விட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தி, மது ஆலைகளை மூட முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரி உள்ளார்.