வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க தவறியர்களுக்கு மறுவாய்ப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பதிவை 2017, 2018, 2019ம் ஆண்டுகளில் புதுப்பிக்க தவறிய முன்னாள் படைவீரர்கள் ஆகஸ்ட் 28க்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு பதிவு:
தமிழகத்தில் அரசு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது அவசியமாகும். குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை உரிய ஆவணங்களுடன் தங்களது கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு 3 வருடங்களுக்கு ஒருமுறை அதை புதுப்பிக்க வேண்டும். பதிவு மூப்பு அடிப்படையில் பணிகள் வழங்கப்படும்.
தமிழக அரசு உப்புக் கழகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!!
முப்படையில் பணியாற்றி வெளியில் வந்த படை வீரர்கள் மறு வேலைவாய்ப்பு பெற, அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். ஏராளமானோர் இந்த பதிவை புதுப்பிக்க தவறி விட்டுள்ளனர். கடந்த 3 வருடங்களில் பதிவை புதுப்பிக்காமல் விடுபட்டுள்ளனர். எனவே முன்னாள் படைவீரர்கள் வேலைவாய்ப்பை புதுப்பிக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கால அவகாசம் வழங்கியுள்ளார்.
ஜூலை 16 வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!
அதன் படி 2017, 2018 மற்றும், 2019ல் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறி இருந்தால், வரும் ஆகஸ்ட் 28க்குள் புதுப்பித்துக் கொள்ளலாம். வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறிய முன்னாள் படை வீரர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில், நேரில் தொடர்பு கொண்டு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்து கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
No comment
Useful
Useful