தொடர்ந்து விதிமுறைகளை மீறிவரும் வங்கிகள் – அபராதத்தை விதித்த RBI…!
இந்தியாவில் உள்ள பல வங்கிகள் அதன் விதிமுறைகளை மீறுவதனால் ரிசர்வ் வங்கி அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. தற்போது சில வங்கிகளுக்கு அபராதத்தையும் விதித்திருக்கிறது.
RBI வங்கி:
இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் இயங்கி வருகின்றன. வங்கிகள் தொடர்பான வழிமுறைகள், வட்டி விகிதம் என அனைத்தையும் ரிசர்வ் வங்கி தான் கவனித்து கொள்கின்றன. தற்போது சில வங்கி விதிமுறைகளை மீறியதற்காக ஹெச்டிஎஃப்சி லிமிடெட் (HDFC) வங்கி மீது ரிசர்வ் வங்கி அபராதம் விதித்திருக்கிறது. மேலும், கடன் மீட்பு முகவர் தொடர்பான விதிகளைப் பின்பற்றாத காரணத்தினால் ஆர்பிஎல் (RBL ) வங்கி மீதும் ரூ.2.27 கோடி அபராதத்தை விதித்துள்ளது.
இந்த விதிமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கியிடம் கேட்ட போது வங்கிகளுக்கான நியாயமான நடைமுறைகள் குறியீடு, வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள், இடர் மேலாண்மை, நிதி சேவைகள் மற்றும் மீட்பு முகவர்களின் அவுட்சோர்சிங் ஆகிய விதிமுறைகளுக்கு உட்படாத காரணத்தினால் தான் அபராதம் விதித்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த விதிமுறைகள் தொடர்ந்து மீறப்படும் போது வங்கிகளுக்கான உரிமமே ரத்து செய்ய நேரிடும் என அறிவித்துள்ளது. இந்த பிரச்சனைகளால் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.