Tokyo Olympics 2020 : இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி! இறுதி சுற்றில் ரவிக்குமார்!
டோக்கியோவில் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளுடன் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே பிவி சிந்து வெண்கல பதக்கம் வென்றார். அதனை தொடர்ந்து தற்போது ஆடவர் மல்யுத்தத்தில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள்:
உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் இந்த முறை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 205 நாடுகளில் இருந்து 11,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தியாவிலிருந்து 120 வீரர், வீராங்கனைகள் 18 விதமான போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.
புதிய ஊழியர்களுக்கு BMW, KTM Bikes, Apple Gadgets இலவசம் – பிரபல நிறுவனம் அதிரடி!
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் மல்யுத்தத்தில் இந்தியாவின் 23 வயது ரவிக்குமார் தாஹியா, கசகஸ்தானைச் சேர்ந்த நுரிஸ்லாம் சனாயேவை எதிர்கொண்டார். ஆரம்பத்தில் கசகஸ்தான் வீரர் 9-2 என முன்னிலை பெற்றார். எனினும் பிறகு சிறப்பாக விளையாடி அதை 9-7 எனக் குறைத்தார் ரவிக்குமார் தாஹியா.
TN Job “FB Group” Join Now
தற்போது ஆடவர் மல்யுத்தத்தில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளார். ஏற்கனவே PV சிந்து வெண்கல பதக்கம் பெற்ற நிலையில் ஆடவர் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு மற்றொரு பதக்கம் உறுதியாகி உள்ளது. அரையிறுதியில் 57 கிலோ எடைப்பிரிவில் கசகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சன்யேவை தோற்கடித்து ரவிக்குமார் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.