ரேஷன் ஊழியர்கள் வேலை நிறுத்தம் – அரசிடம் வலுக்கும் கோரிக்கை!
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
ரேஷன் கடை ஊழியர்கள் :
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு பொருட்கள் பயோமெட்ரிக் பதிவு செய்து வழங்கப்படுகிறது. அதனை மேம்படுத்தி வழங்க வேண்டும் எனவும் எடை மோசடியை தவிர்க்க அத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக ரேஷன் கடைகளுக்கு வழங்க வேண்டும் எனவும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ரேஷன் கடை ஊழியர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
ஆச்சர்யத்தை அளித்த தங்கத்தின் விலை – நிம்மதியில் பொதுமக்கள்!
அது மட்டுமல்லாமல் அவர்களது கோரிக்கைகளில் மாவட்டங்களில் பொருட்களை ரேஷன் கடைகளில் இறக்க கட்டாய இழக்க இறக்க கூலி வசூலிக்கப்படுகிறது. பணியின்போது இறந்த பணியாளர் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். வேறு மாவட்டங்களுக்கு பணி மாறுதல் கேட்கும் பணியாளர்களுக்கு இடம் மாறுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என இந்த போராட்டம் நடைபெற உள்ளதாக ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் செல்ல சந்திரராஜா கூறியுள்ளார்.