தமிழகத்தில் நாளை ரேஷன் கடை விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு!! 

0
தமிழகத்தில் நாளை ரேஷன் கடை விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு!! 
தமிழக ரேஷன் கடைகளின் வாயிலாக நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடை:
தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு ரூ.6,000 நிவாரணத்தொகை வழங்கப்பட்டுவிட்டது. இதனை தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கு தற்போது தான் ரேஷன் கடைகளின் வாயிலாக நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
புத்தாண்டையொட்டி தங்கத்தின் விலையில் மாற்றமில்லை – தாய்மார்கள் ஹாப்பி!!
இந்த நிவாரணத்தொகையை வழங்குவதற்காக இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மட்டும் இயங்கும் என உணவு வழங்கல்துறை அறிவித்துள்ளது. எனவே, வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்கள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன்கள் மூலமாக அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் சென்று நிவாரணத்தொகையை பெற்றுக்கொள்ளலாம். இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக நாளை 4 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மட்டும் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!