அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – CSC மூலம் சேவைகள்! முழு விவரம் இதோ!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - CSC மூலம் சேவைகள்! முழு விவரம் இதோ!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - CSC மூலம் சேவைகள்! முழு விவரம் இதோ!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – CSC மூலம் சேவைகள்! முழு விவரம் இதோ!

இனி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் ரேஷன் கார்டு தொடர்பான சேவைகள் பற்றிய தகவலை அருகில் இருக்கும் பொது சேவை மையத்தில் (CSC) பெறலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

ரேஷன் சேவைகள்

நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏழை மற்றும் எளிய குடும்பங்கள் பயனடையும் வகையில் ரேஷன் முறையில் அத்தியாவசிய பொருட்களை மாநில அரசுகள் விநியோகம் வருகிறது. இந்த சேவைகளின் மூலம் பயனர்கள் அரிசி, கோதுமை, எண்ணெய், சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை மிக குறைந்த விலையில் பெற்று பயனடைய முடியும். தமிழகத்தில் இந்த ரேஷன் கார்டுகள் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என 5 வகையான பயன்பாட்டில் உள்ளன. இந்த ரேஷன் கார்டுகளின் வகை தனிநபரின் ஆண்டு வருமானத்தைப் பொறுத்தது.

TNPSC கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – சம்பளம் ரூ.1,77,500! பிப்.21 கடைசி நாள்!

இந்த ரேஷன் கார்டுகளை பெற்றுக்கொள்ள 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடியுரிமை உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இப்போது, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கார்டுகளை புதுப்பிப்பது துவங்கி நகல் எடுப்பது அல்லது புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பதில் அடிக்கடி சிக்கல்களை சந்திக்கின்றனர். இந்நிலையில் மத்திய அரசாங்கம் தனது டிஜிட்டல் இந்தியா பிரச்சாரத்தின் கீழ் ரேஷன் கார்டு தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதாக தகவல் அளித்துள்ளது. இதுகுறித்து டிஜிட்டல் இந்தியா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பயனர்கள் இனி பொது சேவை மையத்தில் (CSC) ரேஷன் கார்டு சேவைகள் பற்றிய தகவலை பெறலாம்.

ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் பெயர் நீக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உணவு மற்றும் பொது விநியோகத் துறையுடன் பொது சேவை மைய வசதி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 3.70 லட்சம் பொது சேவை மையங்கள் மூலம் ரேஷன் கார்டு சேவைகள் வழங்கப்பட இருக்கிறது. இது தவிர கூட்டாண்மை மூலம் நாடு முழுவதும் உள்ள 23.64 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது பொது சேவை மையத்தின் கீழ் கிடைக்கும் சேவைகளை பொருத்தளவு,

  • பொது சேவை மையம் மூலம் ரேஷன் கார்டு விவரங்களை புதுப்பிக்கலாம்.
  • ஆதார் சீடிங் சேவைகளை பெறலாம்.
  • ரேஷன் கார்டின் நகல் அச்சை நீக்கலாம்.
  • ரேஷன் கார்டு குறித்த தகவல்களை பெறலாம்.
  • ரேஷன் கார்டு தொடர்பான புகார்களை பொது சேவை மையம் மூலம் தெரிவிக்கலாம்.
  • ரேஷன் கார்டு தொலைந்தால், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!