ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – E-KYC விவரங்கள் கட்டாயம்… செப். 30 கடைசி தேதி!
இமாச்சலப் பிரதேசத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது கார்டில் e-kyc விவரங்களை இணைக்க வேண்டும் என உணவு வழங்கல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்பணியை மேற்கொள்ள செப்.30 வரை வரை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
e-kyc விவரம்:
இந்தியாவில் ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக விளங்குவதால் அதனை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் ரேஷன் கார்டுடன் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது இமாச்சல பிரதேசத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் இ- கேஒய்சி விவரங்களை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் சோலன் மாவட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் அரசின் உத்தரவிற்கிணங்க கேஒய்சி விவரங்களை இணைத்து வருகின்றனர்.
திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை – ஜார்கண்ட் அரசு அறிவிப்பு!
இதுவரை 67% பயனாளிகள் இ கேஒய்சி பணியை முடித்துள்ளதாகவும் பலர் இதனை இன்னும் மேற்கொள்ளவில்லை எனவும் மாவட்ட உணவு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இ கேஒய்சி விவரங்களை இணைக்கும் பணியை மேற்கொள்ளாத ரேஷன் அட்டைதாரர்கள் செப். 30ம் தேதிக்குள் இப்பணியை முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் இப்பணியை முடிக்கவில்லை என்றால் தற்காலிகமாக ரேஷன் கார்டு சேவைகள் நிறுத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.