திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – பிப்.8ம் தேதி ரத சப்தமி விழா ஏற்பாடு!
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் சூரிய ஜெயந்தியையொட்டி ரத சப்தமி விழா வருகிற 8 ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று மட்டும் 7 வாகனச் சேவை நடைபெறும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி:
திருப்பதியில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மக்கள் கூட்டத்தை தவிர்க்க ஆன்லைன் மூலம் மாதந்தோறும் ரூ. 300 தரிசன டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் அடுத்த மாதத்திற்கான தரிசன டிக்கெட் விநியோகம் 20ம் தேதி தொடங்குகிறது. ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் 50,000 பக்தர்கள் வரை அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி முதல் 22ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறப்பு பூஜைகளுக்கான டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டது.
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – பண இழப்பை தடுப்பது எப்படி? EPFO முக்கிய அறிவிப்பு!
விஷேச தினங்கள் என்பதால் வெளியிட்ட 20 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. மேலும் ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்ய தொடங்கியதால் இணையதள கோளாறு ஏற்பட்டது. தற்போது நடப்பு மாதம் 8ம் தேதி திருப்பதியில் சூரிய ஜெயந்தியையொட்டி ரத சப்தமி விழா நடைபெறவுள்ளது. அன்று ஒரே நாளில் காலையில் இருந்து இரவு வரை 7 வாகனச் சேவை நடக்கிறது. முதல் வாகனச் சேவையாக காலை 6 மணியில் இருந்து காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகனச் சேவை நடைபெறும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது 62 ஆக உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!
8ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கருட வாகனச் சேவை 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனச் சேவையும் நடைபெறவுள்ளது. மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை கல்ப விருட்ச வாகனச் சேவை, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகன சேவையும் இரவு 9 மணி வரை சந்திர பிரபை வாகன சேவையும் நடைபெறவுள்ளது. அனைத்து வாகனச் சேவைகளும் கோவில் உள்ளேயே பக்தர்களுக்கு அனுமதியின்றி நடைபெறும். மேலும் கோவிலுக்கு வெளியே உள்ள நான்கு மாட வீதிகளில் சுவாமி உலா வராது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.