பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக ரமீஸ் ராஜா நியமனம்? ஆலோசனைக்கு பின் தகவல்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக செயல்பட்டு வந்த இசான் மணி அவர்களின் பதவிக்காலம் ஆகஸ்ட் 25 ஆம் தேதியுடன் முடிவடைவதால், அந்த பொறுப்பில் ரமீஸ் ராஜா நியமனம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய தலைவர்
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இசான் மணி என்பவர் தற்போது பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் நாளை (ஆகஸ்ட் 25) உடன் முடிவடைகிறது. அதனால் கிரிக்கெட் வாரியத்தின் அடுத்த தலைவரை நியமிக்கும் பணிகளை வாரியம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மீண்டும் இசான் மணியை கிரிக்கெட் வாரியத் தலைவராக நியமிக்க விரும்பாத அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அவருக்கு பதில் ரமீஸ் ராஜாவை நியமிக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
‘ரேஷன் கார்டுக்கு கைரேகை கட்டாயம்’ – ஆதார் மையங்களில் குவியும் மக்கள்!
இந்த ரமீஸ் ராஜா பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனாகவும், வர்ணனையாளராகவும் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிய கிரிக்கெட் வாரியத் தலைவரை நியமிப்பதற்கான ஆலோசனை கூட்டம், பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் நேற்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமருடன், ரமீஸ் ராஜாவும் கலந்து கொண்டார். அதில் ரமீஸ் ராஜாவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்க ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதற்கு முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவரை நியமிக்கும் பட்டியலில் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஜித் கான் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மஜித் கான் அப்பதவியை ஏற்கவில்லை என கூறி ரமீஸ் ராஜாவுக்கு தனது ஆதரவை கொடுப்பதாக தெரிவித்திருந்தார். அதே போல இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நடைமுறைகளின் படி அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால் அவருக்கு பதிலாக கங்குலி நியமிக்கப்படுவார் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளது கூடுதல் தகவல்.