தமிழகத்தில் நாளை (மார்ச் 24) முதல் ரமலான் நோன்பு தொடக்கம் – அரசின் தலைமை காஜி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் இன்று பிறை தென்படாததால் நாளை முதல் ரமலான் நோன்பு துவங்கப்படுவதாக தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் அறிவித்துள்ளார்.
ரமலான்
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகையானது ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கமாகும். இந்த பண்டிகை கொண்டாடப்படுவதற்கு முன்னதாக 29 அல்லது 30 நாட்கள் வரை இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். இந்த நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக உணவு சாப்பிடுவார்கள்.
அதன்பின்பு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். இந்த நோன்பின் இறுதி நாள் அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், ரமலான் நோன்புக்கான பிறை இன்னும் தென்படாமல் இருக்கிறது. இதனால் நாளை முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
இதே போன்ற சவூதி அரேபியாவில் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download