சரவணனை நினைத்து வருத்தப்படும் சிவகாமி, நிச்சய ஏற்பாடு செய்யும் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் சந்தியா, சரவணன் அளித்த பேட்டியை டிவியில் பார்த்து குடும்பத்தில் உள்ளவர்கள் சந்தோசப்படுகின்றனர். பின்னர் சரவணன் நிலையை நினைத்து சிவகாமி வருத்தப்படுகிறார். பின்னர் குடும்பத்தினர் பார்வதியின் நிச்சயத்திற்கு தயாராகின்றனர்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில் சரவணனும், சந்தியாவும் டிவியில் வந்ததை பார்த்து குடும்பத்தினர் சந்தோஷத்தில் இருக்கின்றனர். ஆனால் சந்தியா பேசும் போது சரவணன் சோகமாக இருப்பதை பார்த்த சிவகாமி வருத்தப்படுகிறார். சந்தியா பெருமைப்படும் போது சரவணன் எதுவும் பேச முடியாமல் இருப்பதை நினைத்து பார்க்கிறார். பின்னர் சந்தியாவின் பெருமையை குடும்பத்தினர் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
பின்னர் அர்ச்சனா செந்திலிடம் சந்தியாவை பற்றி பேசுகிறார். அவள் என்ன செய்துவிட்டால் என இப்படி புகழ்கிறார்கள். இப்படி திருடனை பிடித்து கொடுத்திருக்காளே. அவன் வெளியே வந்த பின்னால் பலி வாங்கிவிட்டால் என்ன செய்வது என கேட்கிறார். ஆனால் எதுவும் பேசாமல் செந்தில் இருக்க அர்ச்சனா ஏன் எதுவும் பேசாமல் இருக்கீங்க என கேட்கிறார். உடனே செந்தில் காதில் இருந்து பஞ்சை எடுக்கிறார். பின்னர் அர்ச்சனா பேசுவதை கேட்காமல் பாய்யை விரித்து படுகிறார்.
அர்ச்சனா எவ்வளவோ சொல்ல கேட்காமல் இருக்கிறார். பின்னர் சிவகாமியும் கணவரும் பேச சந்தியா எவ்வளவு பெருமை சேர்த்திருக்கிறாள் என பேசுகின்றனர். உங்களுக்கு சந்தியா தான் தெரிந்தால் ஆனால் எதுவும் பேச முடியாமல் இருந்த சரவணன் தான் என் கண்ணிற்கு தெரிந்தார் என சொல்கிறார். சந்தியாவிற்கு புகழ் வந்தாலும் சரவணன் மனசு வலிப்பது எனக்கு தான் தெரியும் என சொல்கிறார். ஆனால் சரவணன் சந்தியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப இருக்கிறார் என தந்தை நினைத்து பார்க்கிறார்.
பின்னர் சந்தியாவின் பேராசிரியர் பேசியதை சரவணன் நினைத்து பார்க்கிறார்.அப்போது சந்தியா வந்து சரவணனை வெளியே படுக்க வேண்டாம் என சொல்லி கூப்பிடுகிறார். ஆனால் சரவணன் தூங்கியது போல நடிக்கிறார். பின்னர் சந்தியா போர்வை போர்த்தி விடுகிறார். அதை நினைத்து சரவணன் வருத்தப்படுகிறார். ஏன் என் மீது இவ்வளவு பாசம் காட்டுகிறீர்கள் என நினைத்து பார்க்கிறார். மறுநாள் அடுப்படியில் வேலை பார்த்து கொண்டிருக்க பார்வதியை அழகுபடுத்திக் கொள்ள சொல்கிறார்.
பின்னர் சரவணன் வந்து நிச்சயதார்த்த வேலைகளை பார்க்க சொல்கிறார். சரவணன் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லி சந்தியாவிற்கு காய் வெட்ட கற்றுக் கொடுக்கிறார். பின்னர் சரவணன் நான் சமையல் பார்த்துக் கொள்கிறேன் என சொல்லி, சிவகாமியை அனுப்புகிறார். ஆதி பொருள்கள் வாங்கி வர சொல்ல குடும்பத்தினர் எல்லா வேலைகளையும் செய்கின்றனர். அர்ச்சனா அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அனைவரும் புடவையை பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர். பின்னர் நிட்சத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.