வளைகாப்பு நிகழ்ச்சியில் அவமானப்படும் வெண்பா, சௌந்தர்யாவிடம் ஹேமாவின் அம்மா பற்றி கேட்கும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
வளைகாப்பு நிகழ்ச்சியில் அவமானப்படும் வெண்பா, சௌந்தர்யாவிடம் ஹேமாவின் அம்மா பற்றி கேட்கும் கண்ணம்மா - இன்றைய
வளைகாப்பு நிகழ்ச்சியில் அவமானப்படும் வெண்பா, சௌந்தர்யாவிடம் ஹேமாவின் அம்மா பற்றி கேட்கும் கண்ணம்மா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
வளைகாப்பு நிகழ்ச்சியில் அவமானப்படும் வெண்பா, சௌந்தர்யாவிடம் ஹேமாவின் அம்மா பற்றி கேட்கும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பாவிற்கும் பாரதிக்கும் கல்யாணம் ஆகவில்லை என சொன்னதால், வந்திருந்த விருந்தாளிகள் வெண்பாவை அசிங்கப்படுத்தி அனுப்புகின்றனர். பின்னர் கண்ணம்மா பாரதி சேர்ந்து ஆசிர்வாதம் செய்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பாவிற்கும் பாரதிக்கும் கல்யாணம் ஆகவில்லை என அஞ்சலி சொல்கிறார். அதை கேட்டதும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். பின்னர் லட்சுமி அப்போ இவங்க பாரதி அங்கிள் மனைவி இல்லையா என கேட்கிறார். உனக்கு யாரு அப்படி சொன்னது என கேட்க, எப்பவும் இவங்க டாக்டர் அங்கிள் கூடவே இருக்காங்களே அதான் கேட்டேன் என சொல்கிறார். உடனே ஹேமா இவங்க என் அம்மா இல்லை, நீயும் நானும் போல டாடியும் இவங்களும் பிரண்ட் என சொல்கிறார்.

கணவர் நாகசைதன்யாவை பிரியும் சமந்தா? இன்ஸ்டா பதிவு மூலம் பதிலடி!

இதை கேட்டதும் கண்ணம்மா சௌந்தர்யாவை பார்த்து ஆமா என கேட்க ஆமாம் என தலையாட்டுகிறார். உடனே நிகழ்ச்சிக்கு வந்த ஒருவர் நீங்க டாக்டர் மனைவி இல்லையா அப்போ ஏன் அவர் பக்கத்தில் நின்று உரசிகிட்டு நின்ற அசிங்கமாக இல்லை என கேட்கிறார். உடனே சௌந்தர்யா அவங்களிடம் மன்னிப்பு கேட்டு பாரதியை ஆசிர்வாதம் செய்ய சொல்கிறார். அஞ்சலி உடனே கண்ணம்மாவை அழைக்கிறார். கண்ணம்மா வெண்பாவை ஒரு மாதிரி பார்க்கிறார்.

பின்னர் கண்ணம்மாவும் பாரதியும் சேர்ந்து ஆசிர்வாதம் செய்கின்றனர். அதை பார்த்து குடும்பத்தினர் சந்தோசப்படுகின்றனர். பின்னர் வெண்பாவை வெறுப்பேத்த குடும்ப போட்டோ எடுத்துக் கொள்கின்றனர் அதில் பாரதி கண்ணம்மா பக்கத்தில் நிற்கிறார். பின்னர் சௌந்தர்யாவும் வேணுவும் போட்டோக்களை பார்த்துக் கொண்டிருக்க. அங்கே கண்ணம்மா வருகிறார். ஏன் என்னிடம் பேசாமல் செல்கிறீர்கள் என கேட்கிறார். அப்படி எல்லாம் இல்லை என சொல்ல ஏன் வெண்பாவிற்கு கல்யாணம் நடக்கவில்லை என்பதை என்னிடம் சொல்லவில்லை என கேட்கிறார்.

வெண்பாவின் வளைகாப்பிற்கு வந்த ‘பாரதி கண்ணம்மா’ நட்சத்திரங்கள் – வைரல் வீடியோ!

பாரதி எங்களிடம் சொல்ல கூடாது என சத்தியம் வாங்கிவிட்டார் என சொல்கிறார் வேணு. அதன் பின்னர் அப்போ ஹேமா அம்மா யாரு என கேட்கிறார். ஹேமாவை அனாதை ஆசிரமத்தில் இருந்து கொண்டு வந்து வளர்க்கிறோம் என சௌந்தர்யா சொல்கிறார். அதற்கான சான்றிதழ் கூட இருக்கிறது என சொல்கிறார். அதெல்லாம் நம்ப முடியவில்லை ஹேமா ஏன் என்னை போலவே இருக்கிறார்.நான் பெத்த பொண்ணு போல எனக்கு உணர்வு வருகிறது. எல்லா குணம் உருவத்தில் என்னை போலவே இருக்கிறாள் என கேட்கிறாள்.

அதெல்லாம் இல்லை என சொல்ல, நான் மருத்துவமனைக்கு சென்றேன் அங்கே டாக்டர் எனக்கு இரட்டை குழந்தை பிறந்தது என சொன்னார். என் இன்னொரு குழந்தை எங்கே என கேட்கிறார். அவங்க பொய் சொல்லிருப்பாங்க என சொல்ல அவங்களுக்கு அப்படி ஒரு தேவை இல்லை. நீங்க தான் என்னுடைய குழந்தையை உங்க பையனிடம் ஆதரவு இல்லாத குழந்தை என கொடுத்திருக்கீங்க என சொல்கிறார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!