விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – சந்தியாவிற்கு பரிசு கொடுத்த சரவணன்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் சந்தியாவின் அப்பா அம்மா யார் என்ற உண்மை சரவணனிற்கு தெரியவர சந்தியாவிற்கு அவரது அப்பா பற்றிய பரிசு ஒன்றை சரவணன் கொடுக்கிறார். அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ராஜா ராணி 2:
ராஜா ரணி 2 சீரியலில் சந்தியாவின் அண்ணன் அண்ணிக்கு குழந்தை பிறந்து இருப்பதால் அவர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளனர். அப்போது சரவணனும் சந்தியாவும் அவர்களை பார்க்க வர அப்போது சரவணனுக்கு சந்தியாவின் அப்பா அம்மா யார் என்ற உண்மை தெரியவருகிறது. தென்காசியில் நடந்த குண்டு வெடிப்பில் அடிபட்டு இருந்தவரை சரவணன் மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார். அவர் தான் சந்தியாவின் அப்பா என சரவணன் தெரிந்து கொண்டு அதிர்ச்சி அடைகிறார்.
இது பற்றி தனது அப்பாவிடம் சரவணன் பேச சந்தியாவிற்கு உனக்கும் எதோ பூர்வ ஜென்ம பந்தம் இருக்கிறது போல அதனால் தான் இப்படி எல்லாம் நடக்கிறது எனவும், சந்தியாவின் மனதில் இருக்கும் இலட்சியத்தை தெரிந்து கொண்டு நீ அதை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என சுந்தர சொல்கிறார். இந்நிலையில் சந்தியாவிற்கு அப்பா அம்மா பற்றிய உண்மையை சரவணன் சொல்ல போகிறார் அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
கோபிக்கு எதிராக திரும்பிய ஈஸ்வரி, திகைத்து நின்ற பாக்கியா – ப்ரோமோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
அதில் சரவணன் சந்தியாவை கோவிலில் வைத்து பரிசு ஒன்றை கொடுக்கிறார் அது என்னவாக இருக்கும் என சந்தியா ஆவலுடன் திறந்து பார்க்க உள்ளே சந்தியாவின் அப்பாவின் பேனா இருக்கிறது. அதை பார்த்து இது என்னுடைய அப்பாவின் பேனா இது எப்படி உங்களிடம் கிடைத்தது என சந்தியா கேட்க, தென்காசி குண்டு வெடிப்பில் அடிபட்டு கிடந்த உன் அப்பாவை நான் தான் மருத்துவமனையில் சேர்த்தேன், உன் அப்பா அம்மா சாகும் பொது கடைசியாக நான் தான் பார்த்தேன் என சொல்ல, சந்தியா உணர்ச்சிவசப்பட்டு அழுகிறார்.